ஒரே ஒரு திருடனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறிய விநோத கார் திருட்டு நிகழ்வு!

கார்களை வாடகைக்கு எடுப்பதுபோல் நாடகமாடி அவற்றை போலி ஆவணங்கள் கொண்டு விற்பனைச் செய்து வந்த பல நாள் கொள்ளையன் பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

வாகன கொள்ளை சம்பவங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில், வாகனங்களை வாடகைக்கு எடுப்பதுபோல் நாடகமாடி விநோத முறையில் 200க்கும் அதிகமான கார்களை திருடிய பலே கொள்ளையன் பிடிப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

விநோத கார் கொள்ளையனிடம் இருந்து சூரத் நகர பொருளாதார குற்ற பிரிவு போலீஸார் ரூ. 4.5 கோடி மதிப்புள்ள 200 கார்களை மீட்டிருக்கின்றது. கார்களை வாடகைக்கு எடுப்பதாகக் கூறி இதுவரை 264 வாகனங்களை கொள்ளையன் விநோத முறையில் திருடிச் சென்றுள்ளான்.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

இந்த நிலையில், காவலர்கள் 200 கார்களை மட்டுமே மீட்டெடுத்திருக்கின்றனர். அனைத்து கார்களையும் காவல்துறையினர் ஒரு மாதத்திற்குள்ளாகவே மீட்டெடுத்திருக்கின்றனர். மேலும், பிற கார்களைத் தேடும் பணியில் அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர்.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

போலீஸார் கூறியதன்படி, கொள்ளையன் பெயர் கெதுல் பர்மர் என்பது தெரிய வந்திருக்கின்றது. இவர்குறித்து வழக்கு கொடுத்த இரண்டே நாட்களிலே போலீஸார் கைது செய்திருக்கின்றனர். கெதுல் பர்மர் தனது திருட்டு கார்களை விற்க நாட்டின் ஓர் குறிப்பிட்ட மாநிலத்தை மட்டும் பயன்படுத்தவில்லை.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

அவர் வெவ்வேறு மாநிலங்களின், வெவ்வேறு மாவட்டங்களை திருட்டு கார்களை விற்க பயன்படுத்தியிருக்கின்றனர். இதன்காரணத்தினால்தான் கொள்ளையன் விற்பனைச் செய்த கார்களை மீட்டெடுப்பதில் லேசான தொய்வு ஏற்பட்டிருக்கின்றது. அதேசமயம் துரிதமாக நடவடிக்கை போலீஸார் அதிக வேகத்தில் கார்களை மீட்டெடுத்து வருகின்றனர்.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

வாடகைக்கு எடுக்கும் கார்களை அதன் உண்மை விலைக்கு பாதிக்கும் குறைவாகவே விற்பனைச் செய்திருக்கின்றனர். எனவேதான் பலர் சில ஆவணங்கள் இல்லாத நிலையிலும் திருட்டு கார்களை வாங்கி ஏமாந்திருக்கின்றனர். தற்போது மீட்டெடுக்கப்பட்ட கார்களில் இருந்து 22 கார்கள் வரை அதன் உரிமையாளர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

தொடர்ந்து, இன்னும் பல கார்களை அதன் உரிமையாளர்களிடத்தில் ஒப்படைக்க காவல்துறையினர் திட்டமிட்டிருக்கின்றனர். நீதிமன்றம் அனுமதி கிடைத்த உடன் அனைத்து கார்களும் அதன் உரிமையாளர்களிடம் அனுப்பி வைக்கப்படும் என சூரத் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

பத்தேனா (Bhathena) பகுதியைச் சேர்ந்த அமர் படேல் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் நடத்தப்பட்ட சோதனையிலேயே இந்த நீண்ட கால கார் கொள்ளையன் சிக்கியிருக்கின்றான். ஜூன் 5ம் தேதி அன்று தன்னுடைய காரை களவுசெய்ததாக கெதுல் பர்மர் மீது அமர் படேல் புகாரளித்தார்.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

இதனடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுத்த போலீஸார், நீண்ட காலமாக பலரை ஏமாற்றி கை வரிசைக் காட்டி வந்த கெதுல் பர்மரை கைது செய்தனர். இவர் மீது ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கெதுல் பர்மர் மட்டுமின்றி இவ்வழக்கின்கீழ் பலர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரே ஒரு திருனிடம் இருந்து மீட்கப்பட்ட 200 கார்கள்! மஹாராஷ்டிராவில் அரங்கேறி விநோத கார் திருட்டு நிகழ்வு!

குறிப்பாக, போலி ஆவணம் மற்றும் காப்பீடை தயாரிக்க உதவியவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கின்றது. ஆகையால், மஹாராஷ்டிரா போலீஸிடத்தில் இன்னும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரை குறிப்பிட்ட நாட்களுக்கு வாடகைக்கு எடுப்பதுபோல் நாடகமாடி மோசடி செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Surat Police Recovered 200 Cars Worth 4.5 Cr From Car Thief. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X