Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்! உண்மையை கேட்டு உச்சு கொட்டும் மக்கள்!
இளைஞர் ஒருவர் அவரது ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பிம்டபிள்யூ (BMW) சொகுசு காரை ஆற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் விலையுயர்ந்த சொகுசு கார் மாடல்களில் எக்ஸ்6 (X6) மாடலும் ஒன்று. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஒரு கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன் ரோடில் இதன் விலை ஒன்றரை கோடியை தாண்டும்.
இது ஓர் சொகுசு அம்சங்கள் நிரப்பப்பட்ட எஸ்யூவி ரக காராகும். இக்காரை சிபியூ வாயிலாக பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. எனவேதான் இதன் விலை மிக மிக அதிகமானதாக இருக்கின்றது. இந்த கார் அதிக திறன் வாய்ந்த காரும்கூட. இக்காரில் 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் வெறும் 5.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இக்காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், சிபிசி, டிஎஸ்சி, டிடிசி, எலெக்ட்ரிக் ஹேண்ட் பிரேக் என பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய விலையுயர்ந்த சூப்பரான சொகுசு காரையே பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவிரி ஆற்றில் தள்ளிவிட்டு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்ட கிராமவாசிகள் விபத்து அரங்கேறியிருப்பதாக கருதி அச்சமடைந்தனர்.
தொடர்ந்து, கார் ஒன்று ஆற்றிற்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாக காவல்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த மீனவ மக்கள் சிலரின் உதவியுடன் காரை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கினர்.
முதலில் காரில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என ஆய்வு செய்தனர். நல்ல வேலையாக அக்காரில் யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்ததில் பெங்களூருவில் உள்ள மஹாலக்ஷ்மி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ஓர் செல்வந்தருக்கு சொந்தமான கார் அது என்பது தெரிய வந்தது.
Source: times of india
அவரை விசாரித்ததில் போதியளவு தகவல் அவரிடத்தில் இருந்து கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரித்ததில், சமீபத்தில் சொகுசு கார் உரிமையாளரின் தாய் இறந்தது தெரியவந்தது. இந்த நிகழ்வு அவரை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியிருக்கின்றது.
மேலும், தாயின் பிரிவு அவரை மிகுந்த மன உளைச்சலுடன் அலைய வைத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர் சொகுசு காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்டிருக்கின்றார். தாயை பிரிந்த விரக்தியில் அவரை இதனை செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இந்த நிகழ்வுகுறித்த இன்னும் தெளிவான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
அதேவேலையில், யாரும் வழக்கு தொடராத காரணத்தினால் சொகுசு காரின் உரிமையாளர் மீது எந்த வழக்கு பதியப்படாமல் காவல்துறை விடுவித்திருப்பதாக கூறப்படுகின்றது. ஸ்ரீரங்கபட்னா பகுதியில் அரங்கேறிய இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. செல்வந்தர், தாய் மீது இந்தளவு பாசம் வச்சிருந்திருக்காரே என பலரையும் புலம்ப செய்திருக்கின்றது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!