Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா?
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக காவல் துறை தரப்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.
இதுதவிர சாலை விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகளும், காவல் துறையும் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை அபராதம் உள்ளிட்ட வழிகளின் மூலம் போலீசார் தண்டித்து வருகின்றனர்.
இந்த சூழலில் விஜயவாடா நகரில், கடந்த ஜனவரி மாதம் முதல் பதிவான போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாதது தொடர்பாகதான் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை விஜயவாடா போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இதன்படி கடந்த ஜனவரியில் இருந்து ஹெல்மெட் அணியாதது தொடர்பாக மொத்தம் 2.80 லட்சம் இ-செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் 40 சதவீதம் பேர் மட்டுமே அபராத தொகைகளை முறையாக செலுத்தியுள்ளனர். புதிய மோட்டார் வாகன சட்டம் தொடர்பாக அம்மாநில அரசு இதுவரை எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை.
எனவே தற்போதைய நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களிடம் இருந்து 100 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இருந்தபோதும் தற்போது வரை, ஹெல்மெட் விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 1.16 லட்சம் பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்தியுள்ளனர். இதன் மூலம் சுமார் 11 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.
பதிவான வழக்குகளின் எண்ணிக்கையில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட டிரான்ஸ்போர்ட் சேவை வாகன டிரைவர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக 18,180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 62 சதவீத ஆட்டோ டிரைவர்கள் அபராத தொகையை முறையாக செலுத்தியுள்ளனர்.
அதே சமயம் மூன்றாவது இடத்தை நம்பர் பிளேட் விதிமுறை மீறல்கள் தொடர்பான வழக்குகள் பிடித்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் ட்ரிபிள் ரைடிங் உள்ளது. ஆனால் ட்ரிபிள் ரைடிங் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகையை முறையாக செலுத்தவில்லை. வெறும் 41 சதவீதம் பேர் மட்டுமே அபராதத்தை செலுத்தியுள்ளனர்.
அதே சமயம் நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை நிறுத்தி விதிமீறலில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் அபராத தொகையை செலுத்தியுள்ளனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அபராத தொகைகளை செலுத்திய பிறகே விடுவிக்கப்படுகின்றன. எனவே இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகையை முறையாக செலுத்தி விடுகின்றனர்'' என்றனர்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!