Just In
- 22 min ago ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- 1 hr ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 3 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 8 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Movies இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
”டிஜிலாக்கரை போய் மோடியிடம் காட்டுங்கள்...” டிஜிட்டல் இந்தியாவில் திடுக்கிட செய்யும் போலீசார்..!!
”டிஜிலாக்கரை போய் மோடியிடம் காட்டுங்கள்...” டிஜிட்டல் இந்தியாவில் திடுக்கிட செய்யும் போலீசார்..!!
டிஜிலாக்கர் செயலி மூலம் வாகன விபரங்களை காட்டிய இருசக்கர வாகன ஓட்டிக்கு அலகாபாத் போலீசார் ரூ. 5900 அபாரதம் விதித்துள்ளனர்.
ரெட்டிட் என்ற இணையதளத்தில் பாதிக்கப்பட்ட அந்த வாலிபர் இந்த சம்பவம் பற்றிய முழுவிபரங்களை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, அலகாபாத் நகரின் ஒருபகுதியில் திருடப்பட்ட ஸ்கூட்டரை தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் பைக்கில் வந்த இஷான் என்ற வாலிபரை நிறுத்தி, போலீசார் ஆவணங்களை கேட்டுள்ளனர்.
இளைஞர் இஷான் தனது வாகனங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் டிஜிலாக்கர் செயலியில் பதிவேற்றி இருந்தார்.
அதை போலீசாரிடம் காட்ட, அவர்களுக்கு அது என்னவென்ற தெரியவில்லை. இதுகுறித்த கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர்.
Recommended Video
இளைஞர் இஷான், இது வாகனங்கள் பற்றிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றக்கூடிய செயலி எனவும் அதை அரசு வெளியிட்ட புதிய வசதி என்றும் தெரிவித்துள்ளார்.
டிஜிலாக்கர் பற்றிய விபரங்கள் பற்றிய ஏதும் அறியாத அந்த போலீசார், இளைஞர் ஈஷானின் விளக்கத்தை ஏற்க மறுத்து விட்டனர். மேலும் அபராதம் செலுத்தவேண்டும் என்று ஒரேடியாக கூறிவிட்டனர்.
மீண்டும் மீண்டும் இஷான் டிஜிலாக்கர் குறித்த அவசியத்தை வலியுறுத்திய போது, போலீசாரில் ஒருவர் இதைக்கொண்டு போய் மோடியிடம் காட்டுங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.
டிஜிலாக்கர் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காவல்துறை பற்றிய அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ள இஷான். போலீசாருக்கு அவர்களது கைப்பேசியை வைத்தே விளக்க முற்பட்டபோது அதற்கு அவர்கள் உடன்படவில்லை என்றும் தனது பதிவில் குறிப்பிடுகிறார்.
பிறகு எத்தனை முறை கூறியும் போலீசார் இஷானின் பேச்சை கேட்கவில்லை. அவருக்கு ரூ.5,900 அபாரதம் விதிக்கப்பட்டது. அதை வாங்கிக்கொண்டு இஷானிடம் அந்த போலீசார்கள் அதற்கான செலானை வழங்கினர்.
ரெட்டிட் இணையதளத்தில் மட்டுமில்லாமல், இந்த சம்பவத்தின் முழு விவரங்களை குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் இஷான் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட சில மணிநேரங்களில் தொடர்ந்து டிஜிலாக்கர் பற்றிய பல்வேறு புகார்களை பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக காவல்துறையில் டிஜிலாக்கர் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாதது பலரது கருத்தாக உள்ளது. இந்த குரலை ஒரு சேராக அங்க பார்க்க முடிந்தது.
டிஜிலாக்கர் பயனாளிகளாக நீங்கள் இருந்தால், உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த செய்தியின் கீழே உள்ள கமெண்டு பாக்ஸில் பதிவிடுங்கள்.
-
சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!