Just In
- 58 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 8 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா? அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...
கொரோனா வைரஸிடம் இருந்து உயிர் காக்கும் கருவியை தயாரித்ததில், மஹிந்திரா நிறுவனம் மீது அதிர வைக்கும் குற்றச்சாட்டை டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மக்களால் தற்போது அதிகம் உச்சரிக்கப்படும் இரண்டு வார்த்தைகள் கொரோனா வைரஸ் மற்றும் கோவிட்-19 ஆகியவைதான். கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19, சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. கடுமையான பாதிப்புகளில் இருந்து சீனா மீண்டு வர தொடங்கி விட்டாலும், உலகின் மற்ற ஒரு சில நாடுகள் நிலைகுலைந்து போயுள்ளன.
குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவுவதால், மருத்துவ உபகரணங்களின் தேவை தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக வென்டிலேட்டர்கள்தான் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன.
நோயாளிகளின் சுவாச மண்டலத்தை தாக்கும் கோவிட்-19 வைரஸ் அவர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தி உயிரை பறிக்கிறது. எனவே வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. நிலைமை கையை மீறி சென்று கொண்டிருப்பதால், வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும்படி, ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனை ஏற்று டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளில் களமிறங்கியுள்ளன. நமது இந்தியாவை பொறுத்தவரை, வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. மஹிந்திராவின் இந்த அறிவிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதன்பின் உடனடியாக பணிகளை தொடங்கிய மஹிந்திரா நிறுவனம் வெறும் 48 மணி நேரத்திற்கு உள்ளாக வென்டிலேட்டர் புரோட்டோடைப்பை உருவாக்கி அசத்தியது. வெறும் 7,500 ரூபாய் என்ற மிகவும் மலிவான விலையில், இந்த இடைக்கால உயிர் காக்கும் கருவி விற்பனைக்கு வரலாம் என்று வெளியான தகவல்கள், மஹிந்திரா நிறுவனத்திற்கு நற்பெயரை சம்பாதித்து கொடுத்தன.
அதிநவீன கருவிகளின் விலை 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை வரும் நிலையில், வெறும் 7,500 ரூபாய் என்பதால், மஹிந்திரா நிறுவனத்தின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலில், இந்த உயிர் காக்கும் கருவிகள் தொடர்பாக மஹிந்திரா நிறுவனத்தின் மீது திடுக்கிடும் புகார் ஒன்று தற்போது கூறப்பட்டுள்ளது.
ஆம், மஹிந்திரா நிறுவனத்தின் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. விலை மலிவான தனது வென்டிலேட்டர் டிசைனை திருடி விட்டதாக, மஹிந்திரா நிறுவனம் மீது பிஜிஐஎம்இஆர் (PGIMER - Post Graduate Institute of Medical Education & Research) டாக்டர் ஒருவர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.
சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆரின் பேராசிரியர் ஒருவர்தான், தனது விலை மலிவான வென்டிலேட்டரின் ஐடியாவை மஹிந்திரா நிறுவனம் திருடி விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். அவரது பெயர் டாக்டர் ராஜிவ் சவுகான். இவர் பிஜிஐஎம்இஆரில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கடந்த ஒரு வருடமாக வென்டிலேட்டரை டிசைன் செய்யும் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிபுணர்களுடன் இணைந்து டாக்டர் ராஜிவ் சவுகான் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர்தான் தற்போது மஹிந்திரா மீது குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மஹிந்திரா குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டாக்டர் ராஜிவ் சவுகான் கூறுகையில், ''இந்த சாதனம் தொடர்பான பணிகளை நாங்கள் செய்து வந்தோம். இது தானியங்கி சுவாச சாதனமாக செயல்படக்கூடியது. இது விலை குறைவானது என்பதால், வென்டிலேட்டர்களை வாங்க முடியாத மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்'' என்றார்.
அத்துடன் சட்டப்பூர்வமான நோட்டீஸை மஹிந்திரா நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் டாக்டர் ராஜிவ் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புரோட்டோடைப் குறித்த தகவல்களை கடந்த ஜனவரி மாதம் அப்லோட் செய்ததாகவும், காப்புரிமை அனுமதி கடந்த மார்ச் மாதம் வந்ததாகவும் ராஜிவ் சவுகான் கூறியுள்ளார்.
இதற்கிடையே கோவிட்-19 வேகமாக பரவ தொடங்கியதால், மிகப்பெரிய அளவிலான உற்பத்திக்கு, இந்த குழு மஹிந்திரா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. அப்போது மஹிந்திரா நிறுவன பிரதிநிதிகள் தனது கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களை எடுத்து கொண்டு, அடுத்த 48 மணி நேரத்தில் அம்பு பேக்கை (Ambu Bag) தங்களது சொந்த தயாரிப்பாக அறிமுகம் செய்து விட்டதாக ராஜிவ் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.
டாக்டர் ராஜிவ் சவுகானின் இந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மஹிந்திரா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
-
இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?