Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா?
குழந்தைகளுக்கான தலை கவசங்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தில் தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யும் நடவடிக்கையை, போக்குவரத்து துறை அதிகாரிகளும், போக்குவரத்து காவல் துறையினரும் தற்போது எடுத்து வருகின்றனர். எனவே அங்கு தலை கவசங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கான தலை கவசங்களுக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேருக்கும் தலை கவசம் அவசியம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் தலை கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம், 2019ன்படி தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதுதவிர அவர்களின் ஓட்டுனர் உரிமம் 3 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படும். ஆனால் இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அபராத தொகையை அரசு 500 ரூபாயாக குறைத்தது.
அதே சமயம் ஓட்டுனர் உரிமத்தை இடை நீக்கம் செய்யும் நடவடிக்கை அமலுக்கே கொண்டு வரப்படவில்லை. ஆனால் தலை கவசம் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை இடை நீக்கம் செய்யும் நடவடிக்கையை தீவிரமாக அமல்படுத்துவது என போக்குவரத்து துறை சமீபத்தில் அதிரடியாக முடிவெடுத்தது.
இதன்படி இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் தலை கவசம் அணிவது கட்டாயம் என கர்நாடக மாநில போக்குவரத்து துறை சமீபத்தில் உத்தரவிட்டது. 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் இதில் அடக்கம். இந்த எச்சரிக்கை மீறப்பட்டால், இரு சக்கர வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிமம் 3 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படும்.
இந்த உத்தரவை அதிகாரிகள் தற்போது தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளதால், தலை கவச விற்பனை அதிகரித்துள்ளது. பெரியவர்கள் பெரும்பாலும் தலை கவசம் வைத்திருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு பலரிடம் தலை கவசம் இல்லை. எனவே பெங்களூரில் லால்பாக் சாலை மற்றும் ஜேசி சாலைகளில் உள்ள கடைகளில் குழந்தைகளுக்கான தலை கவசங்களின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.
ஆனால் குழந்தைகளுக்கு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையிலான விலைகளில் ஒரு சில வகையான தலை கவசங்கள் மட்டுமே இருப்பதாக தலை கவச விற்பனை கடைகளை நடத்தி வரும் சிலர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''பொதுவாக குழந்தைகளுக்கான தலை கவசங்களுக்கு எப்போதும் பெரிய அளவில் தேவை இருக்காது. எனவே ஒரு சில வகைகள் மட்டுமே தற்போது இருக்கின்றன.
ஆனால் தற்போது குழந்தைகளுக்கான சிறிய தலை கவசங்களை கேட்டு நிறைய பேர் வருகின்றனர். எனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த வியாபாரம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது'' என்றனர். தலை கவசம் வாங்க வந்திருந்த ஒருவர் கூறுகையில், ''அதிக எடை கொண்ட தலை கவசத்தை நீண்ட நேரம் அணிவதை எனது குழந்தை விரும்புவதில்லை.
ஆனால் குறைந்த எடையில் குழந்தைகளுக்கான தலை கவசங்களை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. என்னிடம் பயணம் செய்வதற்கு இரு சக்கர வாகனம் மட்டுமே உள்ளது. என்னால் எனது ஓட்டுனர் உரிமத்தை இழக்க முடியாது'' என்றார். விபத்துக்களின்போது குழந்தைகளுக்கு தலையில் படுகாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அவர்களும் தலை கவசம் அணிவதுதான் பாதுகாப்பானது.
Note: Images used are for representational purpose only.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!