Just In
- 11 min ago ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- 1 hr ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 3 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 8 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Movies இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்த எலான் மஸ்க்!
பேட்டரியில் இயங்கும் மின்சார விமானத்தை உருவாக்கும் திட்டத்தை டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகர் எலான் மஸ்க் கையில் எடுத்துள்ளார். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
பேட்டரியில் இயங்கும் மின்சார கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் சிறந்து விளங்குகிறது. அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் புதிய போக்குவரத்து சாதனங்கள் குறித்த யோசனைகளை முன்வைப்பதிலும், அதனை நனவாக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில், ஹைப்பர்லூப் என்ற அதிவேக போக்குவரத்து திட்டத்தை அறிவித்து, அதனை நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக மறுபயன்பாட்டு விண்வெளி ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், அடுத்து ஒரு அசத்தல் திட்டத்தை அவர் கையில் எடுத்துள்ளார். அதாவது, பேட்டரியில் இயங்கும் மின்சார விமானங்களை உருவாக்கும் திட்டம் குறித்து பொறியாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த விமானம் ஹெலிகாப்டர் போன்று இருந்த இடத்தில் இருந்தே மேல் எழும்பி பறக்கும் திறன் வாய்ந்ததாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டம் சாத்தியம்தான் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பேட்டரியில் இயங்கும் மின்சார விமானங்கள் சாத்தியமா? அல்லது அதற்கான சக்திவாய்ந்த பேட்டரி இன்னும் உருவாக்கப்படவில்லையா? என்று ட்விட்டர் மூலமாக அவரது ஃபாலோவர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
உண்மைதான். விமானங்களுக்கான போதிய திறன் வாய்ந்த பேட்டரி இப்போது இல்லை. ஆனால், வரும் ஆண்டுகளில் பேட்டரி திறன் மேம்படும் என்று பதில் அளித்துள்ளார். லித்தியம் அயான் பேட்டரியை ஒப்பிடும்போது ஜெட் எரிபொருள் மிகுந்த திறன் மிக்கது. அதேநேரத்தில், மின் மோட்டார்கள் இலகுவானது என்பதுடன், பெட்ரோல் எஞ்சினைவிட மின்மோட்டார்கள் சிறப்பான இயக்குதல் திறனை வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது லித்தியம் அயான் பேட்டரிகள் அதிகபட்சமாக 300 Wh/kg என்ற திறன் கொண்டதாக இருக்கின்றன. மின்சார விமானத்தை இயக்குவதற்கு 400 Wh/kg என்ற திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரிகள் தேவைப்படும் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளார்.
எனினும், தொடர் ஆராய்ச்சிகள் முயற்சிகள் காரணமாக இது சாத்தியம்தான் என்று கூறி இருக்கிறார். வரும் காலத்தில் ராக்கெட் தவிர்த்து, பிற அனைத்து போக்குவரத்து சாதனங்களும் பேட்டரியில் இயங்கும் வகையிலேயே இருக்கும் என்றும் எலான் மஸ்க் கூறி இருக்கிறார்.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க