Just In
- 29 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இப்போதான் அருமை புரியுது! பாஸ்ட்டேக்கில் இப்படி ஒரு நல்ல விஷயம் மறைந்திருப்பது யாருக்காவது தெரியுமா?
பாஸ்ட்டேக்கில் மறைந்திருக்கும் ஒரு நல்ல விஷயத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே அன்றைய தினம் முதல், பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அத்துடன் தனியார் கார், டூவீலர் ஆகிய வாகனங்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்திய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் தனியார் வாகனங்களை இயக்குவதற்கும், பயணங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஊரடங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் இருந்த நிலைக்கு இந்திய சாலைகள் தற்போது திரும்பி வருகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. கூடவே கொரோனா பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.
ஆனால் நீங்கள் பாஸ்ட்டேக் பயன்படுத்தினால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைத்து கொள்ள முடியும். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பாஸ்ட்டேக் தொழில்நுட்பம் உதவி செய்கிறது என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI - National Highways Authority of India ) தற்போது தெரிவித்துள்ளது.
ஆர்எஃப்ஐடி (RFID - Radio Frequency Identification) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாஸ்ட்டேக் இயங்குகிறது. நீங்கள் பாஸ்ட்டேக் பயன்படுத்தும் நபராக இருந்தால், டோல்கேட்டில் ரொக்கமாக கட்டணம் செலுத்த தேவையில்லை. உங்கள் வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்ட்டேக் கார்டை, டோல்கேட்டில் உள்ள கருவிகள் 'ரீட்' செய்து உங்கள் வருகையை பதிவு செய்யும்.
இதன்மூலம் நீங்கள் ஏற்கனவே இணைத்து வைத்திருக்கும் கணக்கில் இருந்து கட்டணம் கழிக்கப்பட்டு விடும். அதாவது மனித தொடர்பே இல்லாமல் நீங்கள் கட்டணம் செலுத்தி விட்டு டோல்கேட்டை கடந்து செல்வதற்கு பாஸ்ட்டேக் உதவுகிறது. நீங்கள் பாஸ்ட்டேக் பயன்படுத்தாவிட்டால், கட்டணம் செலுத்துவதற்கு டோல்கேட் ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியதாக இருக்கும்.
இது கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும். இதனால்தான் பயணிகளுடைய பாதுகாப்பை பாஸ்ட்டேக் உறுதி செய்வதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டத்திற்கு பிறகான வாழ்க்கைக்கு இந்தியா தயாராகி வருகிறது. இந்த சமயத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் நாட்களில் சரக்கு மற்றும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன்னறிவிக்கிறது.
இது கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும். இதுபோன்ற சூழலில், டோல்கேட் கட்டணம் செலுத்துவதற்கு பாஸ்ட்டேக் வழியை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணங்களை செலுத்துவதற்கு இதுவே பாதுகாப்பான வழி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ள கருத்து உண்மையும் கூட. பாஸ்ட்டேக்கை ஒரு வரப்பிரசாதம் என இந்த சமயத்தில் சொல்வதில் தவறில்லை. இதுதவிர டோல்கேட் கட்டணம் செலுத்த காத்திருக்கும் நேரம் மிச்சம், எரிபொருள் மிச்சம் என பாஸ்ட்டேக்கால் இன்னும் பல்வேறு நன்மைகள் கிடைப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க