Just In
- 48 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வெளியானது அதிரடி உத்தரவு... இந்திய கார்கள் இனி பாதுகாப்பில் வேற லெவலுக்கு போகப்போகுது... எப்படினு தெரியுமா?
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், இனிமேல் முன் பகுதி பயணியின் இருக்கைக்கும் ஏர்பேக் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பதை அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது. கார்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த அதிரடி உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் ஏர்பேக் வழங்குவது கட்டாயமாக இருந்து வருகிறது. அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் குறைந்தபட்சம் ஓட்டுனர் இருக்கைக்கு ஒரு ஏர்பேக்கையாவது கொண்டிருக்க வேண்டும். அனைத்து கார்களிலும் ஓட்டுனர் இருக்கைக்கு ஏர்பேக் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய உத்தரவின் மூலம், இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் குறைந்தபட்சம் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகளை கொண்டிருக்கும். வாகன உற்பத்தி நிறுவனங்கள் விரும்பினால் எத்தனை ஏர்பேக்குகளை வேண்டுமானலும் வழங்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகள் இருப்பது கட்டாயம்.
முன் பகுதியில் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் ஒரு ஏர்பேக் என்பது போதுமானதாக இல்லை. விபத்து நடைபெறும் சமயங்களில் ஓட்டுனருக்கு படுகாயம் ஏற்படுவதையோ அல்லது உயிரிழப்பு ஏற்படுவதையோ இது தவிர்த்து விடும்தான். ஆனால் ஏர் பேக் இல்லாததால், முன் இருக்கையில் உள்ள கோ-பாசஞ்சருக்கு படுகாயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படலாம்.
எனவேதான் தற்போது முன் இருக்கை பயணிக்கும் ஏர்பேக் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதாவது புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் கார் என்றால், ஏப்ரல் 1ம் தேதி முதல் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை கொண்டிருப்பது கட்டாயம்.
அதே சமயம் இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார் என்றால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும். ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களில் கூடுதலாக ஒரு ஏர்பேக்கை வழங்க வேண்டும் என்றால், சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும்.
எனவேதான் ஆகஸ்ட் 1ம் தேதி வரை என சற்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய உத்தரவு காரணமாக எண்ட்ரி-லெவல் கார்களின் விலை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே எண்ட்ரி-லெவல் கார்கள் என குறிப்பிட காரணம், விலை குறைவான அந்த கார்களில் தற்போது ஒரு ஏர்பேக் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதுதான்.
எனவே பெரும்பாலும் அந்த கார்களில்தான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூடுதலாக ஒரு ஏர்பேக்கை வழங்க வேண்டியிருக்கும். சற்று விலை அதிகமான கார்களில் ஏற்கனவே முன் பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு ஏர்பேக்குகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனவே அந்த கார்களின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!