கன்னியாகுமரி டூ காஷ்மீர் இரண்டு பெண்கள் 129 நேரம் சாகசப் பயணம்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பைக்கிலேயே சுமார் 129 மணி நேரம் சாகசப் பயணம் செய்து சாதனை படைத்த இரண்டு பெண்கள் இதன் மூலம் தங்கள் பெயரை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பைக்கிலேயே சுமார் 129 மணி நேரம் சாகசப் பயணம் செய்து சாதனை படைத்த இரண்டு பெண்கள் இதன் மூலம் தங்கள் பெயரை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளனர்.

அம்ருதா காசிநாத், சுப்ரா ஆச்சாரியா ஆகிய இரண்டு பெண்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக சேர்ந்து எண்ணற்ற பயணங்களை மேற்கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் பயணம் மேற்கொள்ளும் இவர்கள், இதுவரை பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளில் பயணம் செய்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது இந்தியாவில் மட்டும் சுமார் 2 லட்சம் கி.மீ., வரை பயணம் மேற் கொண்டனர்.
முன்னதாக இருவர்கள் இருவரும் இணைந்து சாகசப் பயணங்கள் மேற்கோள்வதற்கு முன்னேற்பாடாக சில பயிற்சிகளும் செய்திருந்தனர். இதனால் இவர்கள் பயணங்கள் எளிமையாக சாத்தியமானது.

இந்நிலையில் இருவரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பைக்கில் சாகசப் பயணம் செய்ய முடிவெடுத்தனர். பயணத்தை துவங்கிய 5வது நாளே இலக்கை அடைந்து பயணத்தை முடித்துள்ளனர். இவர்களின் 129 மணி நேர பயணம் மிகவும் சாகசங்கள் நிறைந்ததாகவே அமைந்திருந்தது.

இது குறித்து அம்ருதா கூறுகையில் : "பொதுவாக இந்தியாவில் பெண்கள் தனியாக பயணிப்பதை தவிர்ப்பர், ஆண்களின் துணையுடனே பயணங்களை மேற்கொள்வர். நாங்கள் அந்த கூற்றை உடைக்க முற்பட்டு தற்போது சாதனை படைத்துள்ளோம்." என கூறினார்.

இவர்களின் இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இவர்கள் பெயரை இடம் பெற செய்திருக்கிறது. பயணத்தின் போது தாங்கள் சந்தித்த சாவல்கள் குறித்து கேட்டபோது அவர்கள் பயணம் செய்த 5நாட்களும் 5 மணி நேர தூக்கத்திற்கே சிரமப்பட்டதாக கூறினர்.

மேலும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள டங்லங்லா பகுதியில் கடும் மழை மற்றும் பனிப்பொழிவு இருந்ததால் கடும் சிரமத்திற்கு ஆளானதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த பெண்களின் சாதனை இந்தியாவில் பயணங்களை விரும்பும் மற்ற பெண்களுக்கு விரும்பிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் பெண்களால் எதையும் தைரியாமாக சாதிக்க முடியும் என நிருபித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications