Just In
- 49 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 7 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கமல் ட்வீட் எதிரொலி: லஞ்சம் தர மறுத்து புதிய ஸ்கூட்டரை ஆர்டிஓ-விடமே ஒப்படைத்த உரிமையாளர்..!!
கமல் ட்வீட் எதிரொலி: லஞ்சம் தர மறுத்து புதிய ஸ்கூட்டரை ஆர்டிஓ-விடமே ஒப்படைத்த உரிமையாளர்..!!
ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்டதாக கூறி, புதியதாக வாங்கிய ஸ்கூட்டரை ஆர்.டி.ஓ அலுவலகத்திலே ஒப்படைத்து சென்றார் திருப்பூரை சேர்ந்த நாகராஜ்.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த ஜூன் 30ம் தேதி புதியதாக ஸ்கூட்டர் வாங்கி இருந்தார்.
அன்றைய நாளில் ஸ்கூட்டர் பதிவு செய்யப்படாமல் இருப்பதை பார்த்த நாகராஜ், தனது டீலரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
கேள்விக்கு பதிலளித்த டீலர், ஜூலை 1ம் தேதி நாகராஜின் ஸ்கூட்டர் பதிவு செய்யப்படும் என பதிலளித்து விட்டு சென்றார்.
Recommended Video
ஆனால் டீலர் கூறியது போல ஸ்கூட்டர் அடுத்த நாளில் பதிவு செய்யப்படவில்லை. இதனால் நாகராஜ் சென்று டீலரை சந்தித்த போது, வாகனத்தை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக கூறினார்.
இதற்காக கூடுதலாக பணம் தரவேண்டும் என நாகராஜிடம் டீலர் நிர்பந்தித்துள்ளார். இதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
மேலும் நாகராஜ் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் தனது வாகனம் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கான புகாரை அளித்தார்
புகார் தெரிவித்து ஒரு மாத முடிவடையும் நிலையில், அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எடுக்கப்படவில்லை.
லஞ்சம் கொடுத்து ஸ்கூட்டரை பதிவு செய்ய மனமில்லாத நாகராஜ், வேறு வழியின்றி கடந்த 25ம் தேதி "ஆர்டிஓவிற்கு லஞ்சம் தர பணம் இல்லாததால் வாகனத்தை அவரிடமே அளிப்பதாக" கூறி போர்டு மாட்டினார்
பிறகு தனது ஸ்கூட்டரை திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகராஜின் இந்த செயலால் ஸ்தம்பித்த ஆர்.டி.ஓ அலுவலர்கள், இதுபோன்ற காரணங்களுக்காக வாகனங்களை திரும்ப பெற முடியாது என்று கூறி, ஸ்கூட்டரை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
இருந்தாலும் ஸ்கூட்டரை ஆர்.டி.ஓ-விடம் ஒப்படைப்பதில் உறுதியாக இருந்த அவரைப் பார்த்த ஆர்.டி.ஓ சிவகுருநாதன், நாகராஜுக்கும், வாகன விற்பனையகத்திற்கும் சம்மன் அளித்துள்ளார்.
தமிழக அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பாதிக்கப்படுவோர் அதை வெளியே கொண்டு வரவேண்டும் என சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் ட்வீட்டீயிருந்தார்.
தற்போது திருப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் லஞ்சத்தால் நடைபெறும் முறைகேடுகளை வெளியே கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?