Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே!! சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்!
வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதும், அதனை போலீஸார் கண்டறிந்து அத்தகையவர்களுக்கு அபராதம் விதிப்பதும் உலகம் முழுவதும் பரவலாக நடைபெறக்கூடிய ஒன்று.
நம் நாட்டில் சாலையில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிய போலீஸார் முக்கிய சாலைகளின் ஓரத்தில் நின்றப்படி கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணித்து கொண்டிருப்பர். ஆனால் போலாந்து நாட்டில் இவ்வாறெல்லாம் போலீஸார் சாலையில் நிற்பது இல்லையாம்.
ஏனெனில் அந்த நாட்டில் சாலை விதி மீறுவோர்கள் மற்றும் சாலையில் நடைபெறும் விபத்துகளை கண்காணிக்க ட்ரோன்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது ட்ரோன்கள் எவ்வாறு வாகனங்களை கண்காணிக்கின்றன என்பதை வீடியோவாக போலாந்து போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில், சில கார்களும், மோட்டார்சைக்கிள்களும் தங்களுக்கு முன்னால் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களை வெள்ளை கோடுகளை தாண்டி சென்று முந்தி செல்வதை பார்க்க முடிகிறது. அந்த சமயத்தில் நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கு தாம் போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறோம் என்பது தெரிய வாய்ப்பு இல்லை.
ஏனெனில் இந்த போலீஸ் ட்ரோன்கள், வழக்கமான டிஜிஐ-ஸ்டைல் ட்ரோன்களை காட்டிலும் அளவில் சிறியதாகும். தரையில் இருந்து சற்று உயரம் சென்றாலே இவை கண்ணிற்கு புலப்படாதவை. ஆனால் வழக்கமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும், இந்த பகுதியில் ட்ரோன்கள் உள்ளன என்று.
சாலை விதிமீறல்களில் ஈடுப்படுவோரை அடையாளம் காண ட்ரோன்களை போலீஸார் பயன்படுத்துவது இது ஒன்றும் புதியது அல்ல. இங்கிலாந்து போலீஸார் தான் முதன்முதலாக 2019இல் உயர்தெளிவு கொண்ட கேமிராக்களுடன் ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
தற்போதும் இங்கிலாந்தில் பல மாகாணங்களில் ட்ரோன்களை பயன்படுத்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஹென்லே & லாங்க்ஃபோர்ட் போலீஸார் கடந்த மே மாதம் ட்ரோன்களை பறக்கவிட்டு சோதித்து பார்த்தது தொடர்பான ட்விட்டை தான் கீழே பார்க்கிறீர்கள்.
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து நகர போலீஸார் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், சட்ட விரோதமாக நடத்தப்படும் வாகன பந்தய போட்டி அமைப்பாளர்களை கைது செய்வதற்கும் ட்ரோன்களை இந்த 2021ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவிலும் ட்ரோன்களை போலீஸார் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவ்வாறான சாதாரண சாலை விதிமீறுவோர்களை பிடிப்பதற்காக இல்லாமல், முக்கிய குற்றவாளிகளை கண்காணிப்பதற்கு, முக்கிய வழக்குகளில் முதன்மையான சாட்சியாக விளங்குவோரை கண்காணிப்பதற்காக என பெரிய பெரிய விஷயத்திற்காகவே பயன்படுத்துகின்றனர்.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!