Just In
- 56 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 8 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இதுதான் சரியான நேரம்: சலுகையை வாரி வழங்கும் ஹீரோ... தொடர் அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சி!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மக்களைக் கவரும் விதமாக தொடர் சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்து வருகின்றது. ஹீரோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் போட்டி நிறுவனங்கள் கடும் அச்சத்தில் திகைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கடந்த காலங்களில் உலகின் நம்பர் 1 வாகனத்துறை என்ற பெயரை சூடி வந்த இந்தியா தற்போது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு துயரத்தில் சிக்கி தவித்து வருகின்றது.
அதிலும், 2019ம் ஆண்டு தொடங்கியது முதல், அது அதல பாதாளத்தில் மூழ்கி வருகின்றது. புதிய மாசு உமிழ்வு விதி, எரிபொருள் வாகனங்களின் பதிவு கட்டணம் உயர்வு, அதிகபட்ச ஜிஎஸ்டி வரி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வு உள்ளிட்டவை இதற்கு காரணமாக இருக்கின்றன.
இத்துடன், அண்மைக் காலங்களாக மின்சாரம் சார்ந்த வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளும், தற்போதைய இந்தியா வாகனத்துறையின் படுமோசமான நிலைக்கு ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆகையால், இத்தகைய சூழலில் இருந்து தப்பிக்கும் விதமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில், பணியாட்கள் குறைப்பு, உற்பத்தி குறைப்பு, தற்காலிக உற்பத்தி ஆலை மூடல் உள்ளிட்ட பல அதிரடியில் அவை ஈடுபட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விற்பனையை அதிகரிக்கும் விதமான முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கவர்ச்சிகரமான சலுகையை, அதன் ஸ்கூட்டர்களுக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த சலுகை திட்டத்திற்கு "ஹீரோ ஸ்கூட்டர் கிராண்ட் கார்னிவல்" என்ற பெயரை அது வைத்துள்ளது. மேலும், இச்சலுகை வருகின்ற 14ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்கூட்டர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு சலுகை திட்டத்தில், புதிதாக ஹீரோ ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளன. அவை, ரூ. 999 என்ற முன் தொகையில் ஸ்கூட்டரை பெறுதல் மற்றும் குறைந்த அளவிலான 6.99 சதவீத வட்டி உள்ளிட்ட சலுகைகள் இதில் அடக்கம்.
இத்துடன், கூடுதல் சிறப்பு சலுகையாக ரூ. 8,500 பேடிஎம் கணக்கில் கேஸ்பேக்காக அளிக்கவும் ஹீரோ திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்திய வாகனத்துறை சந்தித்து வரும் மந்த நிலையில், ஹீரோ நிறுவனமும் தப்பிக்கவில்லை. இதன்காரணமாகவே, இத்தகைய சிறப்பு சலுகையை அது அறிவித்துள்ளது.
மேலும், சந்தையில் நிலவி வரும் போட்டியின் காரணமாகவும், இச்சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. முன்னதாக, சமீபத்தில் இதேபோன்றதொரு சிறப்பு சலுகை திட்டத்தை ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம், அதன் ஸ்கூட்டர்களுக்கு அறவித்திருந்தது.
அதில், எக்ஸ்சேஞ்ச், லாயல்டி மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகை என முன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தின்கீழ், பழைய ஸ்கூட்டர் அல்லது பைக்கினை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் மதிப்பிற்குரிய தொகை புதிய ஸ்கூட்டரில் தள்ளுபடி செய்யப்படும். இத்துடன் கூடுதலாக ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியையும் அது வழங்கு உள்ளது.
இதேபோன்று, லாயல்டி திட்டத்தின்கீழ், ஏற்கனவே ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. தொடர்ந்து, ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது ட்யூவட், டெஸ்டினி 125, ப்ளெஸ்ஸர், ப்ளெஸ்ஸர் ப்ளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 எஃப்ஐ உள்ளிட்ட ஸ்கூட்டர்களை விற்பனை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த மாடல் அனைத்திற்கும் ஹீரோ நிறுவனத்தின் சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்