Just In
- 19 min ago ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- 1 hr ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 3 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 8 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Movies இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!
எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதை முதல்முறையாக ராயல் என்ஃபீல்டு உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மின்சார வாகனத் தயாரிப்பில் அனைத்து வாகன நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. ஆனால், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருந்து மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்பு குறித்து எந்த தகவலும இதுவரை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதை அந்நிறுவனத்தின் சிஇஓ வினோத் தாசரி உறுதிப்படுத்தி உள்ளார்.
ஜாவா, பெனெல்லி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து கடுமையான சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டத்திற்கு வர்த்தகத்தை கொண்டு செல்வதற்கான பணிகளில் ராயல் என்ஃபீல்டு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மாடல்ககளை அறிமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், மின்சார வாகனங்களுக்கான சந்தை வலுவடையத் துவங்கி இருக்கிறது.
எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் இல்லாமல் வர்த்தகத்தை தொடர்ந்து வலுவாக கொண்டு செல்ல முடியாது. பல நிறுவனங்கள் இப்போதே எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த விலையில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட்டை மனதில் வைத்து புதிய மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு புதிய மோட்டார்சைக்கிள் உருவாக்கப் பணிகளுக்காக ரூ.700 கோடியை அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்தது.
இந்த முதலீட்டை பயன்படுத்தி, மின்சார மோட்டார்சைக்கிள் மாடலின் உருவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் உறுதியாகி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு தக்கவாறு, சக்திவாய்ந்த மின் மோட்டார் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
அதேநேரத்தில், இந்த புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சோதனைகளுக்கு உட்படுத்தி சந்தைக்கு கொண்டு வருவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது. அதாவது, வரும் 2022-23ம் ஆண்டு காலக்கட்டத்தில் ராயல் என்ஃபீல்டு களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் மூன்று ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பும் ஓரளவு வலுப்பெற்றிருக்கும். அப்போது அறிமுகம் செய்தால் சந்தையின் வர்த்தக ஓடத்திற்கு இணையாக செல்ல முடியும் என்று ராயல் என்ஃபீல்டு கருதுகிறது.
Source: ET Auto
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?