Just In
- 51 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 8 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு!
திருச்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் பெனெல்லி நிறுவனம் முக்கிய நிறுவனமாக இருந்து வருகிறது. டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சரியான விலை என அனைத்திலும் பெனெல்லி நிறுவனத்தின் பைக் மாடல்கள் நிறைவை தருவதால், வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் பெனெல்லி ஈடுபட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல முக்கிய நகரங்களில் புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது திருச்சி மாநகரில் புதிய பைக் ஷோரூமை பெனெல்லி நிறுவனம் திறந்துள்ளது. கரூர் பைபாஸ் சாலையில் விக்ரம் பிளாஸா என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது.
திருச்சியில் புதிய ஷோரூம் திறப்பு குறித்து பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜாபா கூறுகையில்,"நாடுமுழுவதும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் வகையில் புதிய டீலர்களை திறந்து வருகிறோம். திருச்சியில் புதிய டீலர்ஷிப் திறப்பு மட்டற்ற மகிழ்ச்சியை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை அனுபவத்தை வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். திருச்சி டீலரில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவை அனுபவத்தை உணர்வார்கள்.
நாடு முழுவதும் விற்பனை, சர்வீஸ் மற்றும் விற்பனைக்கு பிந்தைய உதிரிபாகங்கள் சப்ளை ஆகியவற்றை வழங்கும் 3எஸ் ஷோரூம்களை திறப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இது வெறும் பைக் ஷோரூமாக மட்டுமில்லாமல், பைக் பிரியர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அமையும்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஷோரூமில் பெனெல்லி 302ஆர், டிஎன்டி 300 மற்றும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இம்பீரியல் 400 பிஎஸ்-6 மாடல் பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மாடலுக்கு ரூ.6,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்ப்டடுள்ளது.
புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த பைக்கிற்கு ரூ.4,999 மாதத் தவணை கொண்ட கடன் திட்டமும் வழங்கப்படுகிறது. இம்பீரியல் 400 பைக்கின் விலையில் 85 சதவீதம் வரை கடனாக பெறும் வாய்ப்பும் உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு திருச்சி பெனெல்லி ஷோரூமை நேரில் அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
-
இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!