கால் இடுக்கில் குழந்தை... முதுகில் டெலிவரி பொருள்! நிச்சயம் இந்த டெலிவரி பாயின் கதை உங்கள் மனதை உருக வைக்கும்!
vகால் இடுக்கில் குழைந்தையையும், முதுக்கு பின்னால் டெலிவரி பொருளையும் சுமந்து செல்லக் கூடிய டெலிவரி பாயின் நெகிழ வைக்கும் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சாப்பாடு தொடங்கி மருந்து, மாத்திரை என அத்தியாவசிய பொருட்கள் பல தனியார் நிறுவனங்களின் 'டூர் டெலிவரி' சர்வீஸ் வாயிலாக நம்முடைய வீட்டு வசலுக்கே வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன. நம்முடையை நேரத்தையும், வேலையையும் மிச்சப்படுத்தும் வகையில் வெயில், மழை பாராமல் இதற்காக பல ஆயிரக் கணக்கான டெலிவரி பாய்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கொஞ்சம் நேரம் தாமதம் ஆனால்கூடா, அவர்களை திட்டி தீர்த்துவிடுகின்றோம். போதாத குறைக்கு அவர்களுக்கு எதிராக ரிவியூ, புகார் உள்ளிட்டவற்றையும் செய்து விடுகின்றோம். இதை செய்வதற்கு முன்னால் ஏன் லேட், வழியில் ஏதேனும் பிரச்னையா எனகூட நாம் விசாரிப்பதில்லை.

இருப்பினும், அனைத்து கசப்பான அனுபவங்களையும் தூசியை தட்டிவிடுவதுபோன்று மிக அசால்டாக தட்டிவிட்டு நகர்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர் ஒரு சில டெலிவரி பாய்கள். இப்பணியில் தற்போது பணியாற்றும் பலர் பட்டதாரி இளைஞர்களாக இருக்கின்றனர்.

குடும்பத்தின் வறுமையான சூழ்நிலை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றின் காரணமாக இப்பொது சேவையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முற்றிலும் வித்தியாசமான ஓர் டெலிவரி பாய் பற்றிய தகவலை எஸ்சிஎம்ஜி செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

பொதுவாக டெலிவரி பாய்களின் வாகனங்களில் சாப்பாடு அல்லது வீட்டுக்கு தேவையான பிற பொருட்கேள இருக்கும். ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த டெலிவரி பாயின் வாகனத்தில் ஓர் இரண்டு வயது பெண் குழந்தையை நம்மால் காண முடிகின்றது. இது வேறு யாருமில்ல, டெலிவரி பாயின் குழந்தைதான். இவளின் பெயர் லி ஃபீயர் (Li Fei) ஆகும்.

ஆறு மாத குழைந்தை பருவத்தில் இருந்தே இவள் இவ்வாறுதான் தன்னுடைய தந்தையின் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றாள். இவருடைய தாய் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணி புரிந்து வருகின்றார். குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக இருவரும் (குழந்தையின் தாய்-தந்தை) பணிக்கு செல்கின்றனர்.

ஆகையால், மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் தானே குழைந்தையை பார்த்து வந்திருக்கின்றார். குறிப்பாக, தன்னுடைய டெலிவரி பணிகளின்போதும் குழைந்தையை தன்னுடனேயே அவர் எடுத்துச் செல்வதை அவர் வாடிக்கையாக் கொண்டிருக்கின்றார்.

அவ்வாறு, பணியில் இருக்கின்ற நேரங்களில், குழைந்தை ஓர் பெட்டிக்குள் அமர்த்திவிட்டு தன்னுடைய பணிகளை அவர் கவனிப்பார். அந்த பெட்டியில் மிருதுவமான துணிகளால் ஆனது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாறே தனது 6 மாதத்தில் தொடங்கிய பயணத்தை 2 வருடங்கள் ஆகியும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார், லி ஃபீயர்.

தாயின் பணி நேரம் முடிந்த பின்னர் மீண்டும் தாயிடமே அவர் சென்றுவிடுவார். இடையில் பசிக்கும் நேரங்களில் புட்டி பால் தான் அவளுடைய பிரதான உணவு. பணி நேரங்களில் குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டதில் எந்த சிரமும் இல்லை என்கிறார், அவளின் தந்தை. இவள் பெரும்பாலும் அழமாட்டாள். எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பாள் என்றும் அவர் கூறினார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் குட்டியான பெட்டிக்குள் அமர்ந்திருக்கின்ற வேலையிலும் அழகாக அவள் சிரிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் சோகம் என்ன என்றால் லி ஃபீயர் ஐந்து மாத குழைந்தையாக இருந்தபோது அவளை கடுமையான நிமோனியா காய்ச்சல் தாக்கியிருக்கின்றது. இதில் இருந்து அவளை மீட்கவே பெரும் போராட்டத்திற்கு தாய், தந்தை இருவரும் ஆளாகியிருக்கின்றனர்.
Image Courtesy: South China Morning Post
இவள் விளையாடுவதற்கென்று எந்த பொம்மையோ, நண்பர்களோ இல்லை. ஆகையால், எப்போதும் தனியாகவே இவள் விளையாடிக் கொண்டிருப்பாள் இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து இவளுக்கு உதவ சீன மக்கள் பலர் முன் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதும், இந்த 2 வயது குழைந்தையின் நிலையைக் கண்டு பலர் கண்ணீர் வடித்த வண்ணம் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








