Just In
- 4 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 4 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 4 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 7 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை கட்; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிரம்
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கினால் போதும், பொத
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கினால் போதும், பொதுமக்களுக்கான சலுகையை கட் செய்து விடலாமா என அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களின் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும்வகையில் இந்தியாவில் ஃபேம் என்ற குழுமத்தை அமைத்து அதன் மூலம் பல்வேறு திட்டங்களை அமல் படுத்தி வருகிறது.
முதல் கட்டமாக ரூ 1000 கோடி நிதியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த குழு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ 1.3 லட்சம் வரை மானியம் வழங்கியது. பைக்குகளுக்கு ரூ 30 ஆயிரம் வரை மானியங்கள் வழங்கியது.
இதனால் எலெக்ட்ரிக் கார்கள் சாதாரண காரை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் இந்த மானியம் இருப்பதால் மக்களுக்க சாதாரண காரின் விலையிலேயே இந்த காரும் கிடைத்தது. மேலும் பெட்ரோல்/டீசல் கார்களை காட்டிலும், எலெட்க்ரிக் காரில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க முடிகிறது.
தற்போது ஃபேம் குழுமத்தின் முதற்கட்ட பணி காலம் வரும் செப் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின் துவங்கவுள்ள இரண்டாம் நிலையை கட்டமைக்கும் பணியில் அந்த குழு இறங்கியுள்ளது. தற்போதும் இரண்டாம் கட்டமாக இந்த குழுவிற்காக ரூ 9000 கோடியை ஒதுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த கட்டத்தில் மெத்தமாக எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் ஓலா, உபேர் போன்ற கேப்ஸ் நிறுவனங்களுக்கு மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது எலெக்ட்ரிக் கார் வாங்கும் அனைவருக்கும் இந்த மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியம் நீக்கப்பட்டு, கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களை விட இது போன்ற கார்பரேட் நிறுவனங்கள் தான் எலெக்ட்ரிக் கார்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.
பல பெரு நகரங்களில் பெருகி வரும் மாசுவை கட்டுப்படுத்த அரசு வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்குள் இயங்கும் எல்லா வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என முடிவு செய்துள்ளது.
ஆனால் கடந்தாண்டு 32 லட்சம் பெட்ரோல்/ எலெக்ட்ரிக்/ சிஎன்ஜி ரக கார்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரையில் வெறும் 1500 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது அரசின் முயற்சியை பின்னடைவிற்கு கொண்டு சென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் எலெக்ட்ரிக் கார்கள் மீது மக்களுக்கு இருக்கும் அவ நம்பிக்கையே
அதனால் ஃபேம்மின் இரண்டாம் கட்டத்தில் அதிகமாக கார்களை வாங்கும் கேப்ஸ் நிறுவனங்களுக்கு சலுகை மூலம் கார் வழங்கி அந்த கார்கள் இந்திய ரோட்டில் ஓடும் போது மக்களுக்கு எலெட்ரிக் கார்களுக்கு மெதுமெதுவாக நம்பிக்கை ஏற்படும் அதன் மூலம் மக்களும் அந்த கார்களை வாங்க துவங்குவர் என்று அரசு திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் எலெக்ட்ரிக் பைக்களுக்கான மானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் எலெக்ட்ரிக் பஸ்களை வாங்கவும் அரசு மானியம் வழங்கி வருகிறது. இதுவும் இரண்டாம் கட்ட ஃபேமிலும் தொடரும் என கூறப்படுகிறது.
ஆனால் தற்போது பஸ்களுக்கான விலையில்இருந்து 60 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இனி அது 40 சதவீதமாக மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. 2030க்குள் எல்லா வாகனங்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தற்போது ஃபேம் குழுமத்தின் இந்த வரையறை மத்திய கனரக தொழிற்துறைக்கு அனுமதிக்காக அனுப்பபட்டுள்ளது. மத்திய அரசு அனுமதியளித்தால் தற்போது அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் இனி கார்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.
விரைவில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஓலா, உபேர் நிறுவனங்கள் சார்பில் பல எலெக்ட்ரிக் கார்கள் இயங்கப்படும் என தெரிகிறது. மேலும் ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த 2030ல் எல்லா கார்களையும் எலெக்ட்ரிக் மயமாக்கும் திட்டம் சற்று தாமதமானலும் உறுதியாக நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!
- ஸ்கூட்டருக்கு வழி விடாத டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?
- பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்
- புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!
- இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?