Just In
- 3 min ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 2 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 7 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 7 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை அசால்டாக அபேஸ் செய்த திருடர்கள்... உஷார்...!
கன்னத்தில் மருகு வைத்துக் கொண்டு, லுங்கியை ஏத்திக் கட்டிக் கொண்டி, கழுத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு வருபவர்கள்தான் திருடர்கள் என்ற பிரம்மையை நமக்கு தமிழ் சினிமா கொடுத்து விட்டது.
ஆனால், நிஜத்தில் சும்மா ரெமோ மாதிரியிருக்கும் சில இளைஞர்கள்தான் இந்த அபேஸ் வேலைகளை குலத்தொழிலாக வைத்துள்ளனர். சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் அசால்ட்டாக ஆடி காரையும், வாங்கி இரண்டு மாதங்களே ஆன பிஎம்டபிள்யூ காரையும் அதிகாலையில் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள் இருவர்.
பரபரப்போ, பதற்றமோ இல்லாமல் சூப்பர் மார்க்கெட்டில் வெங்காயத்தை எடுத்துக் கூடையில் போடுவது போல வெகு கேசுவலாக காரை லவட்டியிருக்கிறார்கள் இந்த நூதனத் திருடர்கள்.
நொய்டாவின் 17 ஏ செக்டார் பகுதியில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தத் திருடர்களின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியும் உள்ளது. அந்தப் பகுதிக்குள் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கேட் அங்கு வீடுகளில் பணிபுரியும் வீட்டு வேலைக்காரர்கள் வந்து செல்வதற்கு வசதியாக காலை நேரத்தில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை திருடர்கள் தங்களது சாதகமாக பயன்படுத்திய காரை களவாடியுள்ளனர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆடி காரை அந்த வீட்டின் பணியாளர்கள் கழுவிவிட்டு, அவர்கள் வீட்டுக்குள் சென்றவுடன், மெதுவாக உள்ளே நுழையும் இளைஞர் ஒருவர், எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் காரை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார். பிறகு காரை விட்டு இறங்கி அந்த வீட்டுக்குள் செல்லும் அந்த இளைஞர், உடனடியாக திரும்பி வந்து காரில் ஏறிச் செல்கிறார்.
இதைத் தொடர்ந்து, ஏ-37 என்ற கதவு எண் கொண்ட வீட்டுக்குள் நுழையும் மற்றொரு நபர், அங்குள்ள டேபிளின் மேல் இருந்த சாவியை எடுத்து, வாசலில் நிறுத்தியிருந்த புதிய பிஎம்டபிள்யூ காரை திருடுகிறார். அந்த கார், ரித்தேஷ் ரூப்ரம்கா என்பவருக்குச் சொந்தமானது.
அவரது தாயார் வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிய போதுதான் கார் களவாடப்பட்ட விஷயம் தெரிய வந்துள்ளது. இரு வீடுகளிலும் கார் திருடப்பட்டது தெரிந்து சுதாரிப்பதற்குள், திருடர்கள் அந்த இடத்தை விட்டு தப்பியோடி விட்டனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக ரித்தேஷ் ரூப்ரம்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும், சிசிடிவியில் பதிவான உருவத்தின் அடிப்படையிலும் போலீஸார் திருடர்களைத் தேடி வருகின்றனர்.
கண் அசந்தால் கூட நம்மையே கடத்தி விடும் உலகம்... நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்...
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?