Just In
- 55 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News இந்திய எல்லையில் சியாச்சினுக்கு மிக அருகே.. சீனா அமைக்கும் புதிய சாலை! எதற்காக தெரியுமா? பகீர் தகவல்
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வாகன இரைச்சலால் செவித் திறனை இழக்கும் டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சி ரிப்போர்ட்...
பொதுவாகவே, நம்ம ஊர் டிராஃபிக் போலீஸ்களைக் கண்டு நாம் சற்று பயப்பட்டாலும், உள்ளுக்குள் துளியளவும் அவர்களை மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்கு முழக்க, முழுக்க காரணம் அவர்கள்தான். கடமையைச் செய்வதற்குப் பதிலாக காசு கறப்பதிலேயே பெரும்பாலான டிராஃபிக் போலீஸார் ஈடுபடுவதால், அவர்களை மிகவும் இழிவாகவே இந்த சமூகம் பார்க்கிறது. வெளியே பொய்யாக நடிப்பதும், உள்ளே கண்டபடி திட்டுவதும்தான் அவர்களுக்கு நாம் தரும் மரியாதை.
சரி, அது ஒரு புறமிருக்கட்டும்... அதேவேளையில், கடமையே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் நமக்காக போக்குவரத்தை சரி செய்யும் பல நேர்மையான காவலர்களும் இருக்கிறார்கள். முதல்வர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பந்தோபஸ்து, மறியல், பேரணி பாதுகாப்பு என தார் சாலைகளில் நாள் முழுவதும் தவம் கிடக்கும் எத்தனையோ சாமானிய டிராஃபிக் போலீஸாரின் நிலை பரிதாபத்துக்கு உரியதுதான்.
அண்மையில், நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சாலைகளில் ஏற்படும் ஒலி மாசுவால் (ஹாரன், வாகன சப்தங்கள் கொடுக்கும் இரைச்சல்) பெரிதும் பாதிப்பது டிராஃபிக் போலீஸார்தான் என்று கூறுகிறது அந்த ஆய்வு.
பெரும் தொழிற்சாலைகளில் இரைச்சலுக்கு நடுவே பணியாற்றுவதைக் காட்டிலும், இது கடினமானது என அந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. வேறு வகையான வேலைகளை செய்பவர்களை விட, போக்குவரத்து ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ஒலி மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் 50 சதவீதம் அதிகமாம்.
இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறது அந்த சர்வே. மாதம் ஒரு முறை இந்தக் காரணங்களுக்காக டிராஃபிக் போலீஸார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிகிறது.
சாலைப் போக்குவரத்தை கண்ட்ரோல் செய்யும்போது காதில் இயர் போன்களை மாட்டிக் கொண்டும் வேலை செய்ய முடியாது என்பதால், இத்தகைய சவால்களை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் டிராஃபிக் போலீஸார் உள்ளனர். ஒலி மாசு காரணமாக செவித் திறன் முழுமையாக பாதிக்க வாய்ப்பில்லை என்றாலும், கேட்கும் திறன் குறைவது உறுதி என்கிறார் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமலிங்கம். மொத்தத்தில் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸாரின் நிலை கவலைக்குரியதுதான் என்பதை தெளிவாக உணர முடிகிறது. அதேவேளையில், மக்கள் அவர்கள் மேல் இரக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம், தங்களது கீழ்த்தரமான செயல்பாடுகள்தான் என்பதை குறிப்பிட்ட டிராஃபிக் போலீஸாரும் உணர வேண்டும்.
அப்போதுதான் உங்களால் உரக்கச் சொல்ல முடியும் காவல்துறை உங்கள் நண்பன் என்று...
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?